Published : 04 Aug 2016 08:30 AM
Last Updated : 04 Aug 2016 08:30 AM

கிரண்பேடியின் ட்விட்டர் கருத்தால் சர்ச்சை

பழங்குடியினர் குறித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ட்விட்டரில் வெளியிட்ட கருத்தால் சர்ச்சை கிளம்பியுள்ளது.

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கிரண்பேடி பொறுப்பேற்றது முதல் தனது செயல்பாடுகள் குறித்து அவ்வப்போது ட்விட்டரில் பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று அவர் ட்விட்டரில், “பழங்குடியினர் மிக கொடுமையானவர்கள் என்பது தெரிந்ததே. அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதில் திறமைசாலிகள். அவர்கள் கைது செய்யப்பட்டதும் இல்லை; தண்டனை பெற்றதும் இல்லை” என்று கூறியிருக்கிறார்.

கிரண்பேடியின் இந்த கருத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பல்வேறு தரப்பில் இருந்து இக்கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x