Published : 19 Apr 2017 02:45 PM
Last Updated : 19 Apr 2017 02:45 PM
அதிமுக (அம்மா) அணியில் அமைச்சர்கள் அனைவரும், அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி. தினகரனுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில், தினகரன் தனக்கு ஒத்துழைப்பு நல்கிய கழக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தினகரன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில், ''இக்கட்டான சூழ்நிலையில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பதவியை ஏற்றுக்கொண்டேன்.
ஏதோ ஒரு அச்சம் காரணமாக அமைச்சர்கள் என்னையும், குடும்பத்தினரையும் ஒதுங்கி இருக்க சொல்கிறார்கள். பொது வாழ்க்கையில் அச்சம் இருக்கக்கூடாது.
நான் ஒதுங்கி இருப்பதால் கட்சிக்கு நன்மை என்றால் ஒதுங்கியிருப்பதில் தப்பில்லை. அப்படி நினைக்கக்கூடிய முதிர்ச்சி உள்ளவன் நான்.
கட்சியும் ஆட்சியும் பலவீனம் ஆவதற்கு என்றும் நான் காரணமாக இருக்க மாட்டேன்.
எனக்கென்று ஒரு பொறுப்பு உண்டு என்ற எண்ணத்தில் சொல்கிறேன், எந்தக் காரணத்தை கொண்டும் கட்சி பிளவுபட்டு விடக்கூடாது. அனைவரும் ஒற்றுமையாக இருங்கள்.
எனக்கு இதுவரை ஒத்துழைப்பு நல்கிய அத்துணை கழக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT