Published : 20 Jul 2016 09:01 AM
Last Updated : 20 Jul 2016 09:01 AM

வலியால் துடித்த கப்பல் ஊழியரை கடலோர காவல் படை மீட்டது

கோவாவில் உள்ள தேசிய கடல்சார் ஆய்வு மையத்தைச் சேர்ந்த ‘சிந்து சாதனா’ என்ற ஆய்வுக் கப்பல் சென்னை கடலோர பகுதியை ஒட்டி 290 நாட்டிக்கல் மைல் தொலையில் கடல் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது அதில் இருந்த ராஜீவ்குமார் என்ற ஊழி யருக்கு திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. அவருக்கு சிகிச்சை அளிக்க அக்கப்பலில் போதிய மருத்துவ வசதி இல்லை.

இதையடுத்து, அக்கப்ப லின் கேப்டன் இந்தியக் கடலோர காவல் படையின் உதவியை நாடினார். இதைத் தொடர்ந்து இந்தியக் கடலோர காவல் படையின் ‘வராத்’ என்ற ரோந்துக் கப்பல் கேப்டன் அன்வர்கான் தலைமையில் மருத்துவக் குழுவினருடன் நேற்று முன் தினம் புறப்பட்டுச் சென்றது.

ஊழியர் ராஜீவ்குமாரை பரிசோதித்தபோது அவருக்கு குடல் இறக்க பாதிப்பு இருந்தது தெரியவந்தது. அவரை கடலோர காவல் படையின் மருத்துவக் குழு நேற்று கரைக்கு அழைத்து வந்தது. ராஜீவ்குமார் சென் னையில் உள்ள ஒரு தனி யார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட் டார். இந்தியக் கடலோர காவல் படையின் மண்டல அலுவலக செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x