Published : 21 Jan 2014 12:00 AM
Last Updated : 21 Jan 2014 12:00 AM

பெண்ணிடம் செல்போனில் தகாத பேச்சு- கணவர் தற்கொலை: வக்கிர இளைஞருக்குப் போலீஸ் வலை

பெண்ணிடம் செல்போனில் இளைஞர் தகாத முறையில் பேசிய பிரச்சினையால் குடும் பத்தில் தகராறு ஏற்பட்டு கணவர் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவத்தில் தொடர்புடைய இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.

பண்ருட்டி கெங்கையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பரந்தாமன் (29). மினி வேன் வைத்து வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி சத்யா (25). இவர்களுக்கு 1 மகள், 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் இவரது மனைவிக்கு, தட்டாம்பாளை யத்தைச் சேர்ந்த கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளி ஸ்ரீதர் என்பவர், கடந்த ஒரு மாதமாகச் செல்போனில் ஆபாச வார்த்தைகளைப் பேசித் தொந்தரவு செய்ததாகக் கூறப் படுகிறது.

இதுகுறித்து கணவரிடம் கூறினார். இதையடுத்து அவர் தனது உறவினர் செந்தாமரையை அழைத்துக்கொண்டு ஸ்ரீதரை கண்டித்து வந்ததாகக் கூறப்படு கிறது. ஆனாலும் செல்போன் தொந்தரவு தொடர்ந்துள்ளது.

பரந்தாமன் புதுப்பேட்டை போலீஸில் புகார் கொடுத்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதில் கடந்த வெள்ளிக்கிழமை கோபித்துக் கொண்டு பரந்தாமன் வெளியே சென்றார். பின்னர்க் கரும்பூர் என்ற இடத்தில் பூச்சி மருந்து குடித்துத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பான புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து பரந்தாமனின் உடலைக் கைப்பற்றிப் பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

இதனிடையே ஞாயிற்றுக் கிழமை சத்யா கொடுத்தப் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த பண்ருட்டி போலீஸார், தலைமறைவான ஸ்ரீதரை தேடி வரு கின்றனர். வக்கிரப் புத்திக் கொண்ட நபர் செல்போனில் ஆபாசமாகப் பேசியதன் விளை வாக எழுந்த பிரச்சினையில் ஒரு குடும்பமே தற்போது நிலை குலைந்து போன சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x