Published : 20 Sep 2016 09:03 AM
Last Updated : 20 Sep 2016 09:03 AM

பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ள பஞ்சாயத்தை பெண்களுக்கு ஒதுக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்: தமிழக தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ள பஞ்சாயத்தை பெண்க ளுக்கு ஒதுக்கீடு செய்வது தொடர் பான மனுவின் மீது உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் பாக பரிசீலித்து முடிவெடுக்கும்படி தமிழக தேர்தல் ஆணையத்துக்கும் அரசுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் தாலுகா தையூர் பஞ்சாயத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் இந்துமதி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

கடந்த செப்டம்பர் 1-ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டி யலின்படி எங்கள் பஞ்சாயத்தில் மொத்தம் 9 ஆயிரத்து 205 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண்கள் 4 ஆயிரத்து 563 பேர். பெண்கள் 4 ஆயிரத்து 642 பேர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். தற்போது சுழற்சி அடிப்படையில் இந்த பஞ்சாயத்து 2016 முதல் 2026 வரை பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பஞ்சாயத்து தலைவர் பத விக்கு ஆண், பெண் இருபாலரும் போட்டியிடும் வகையில் பொதுப் பிரிவாக மாற்ற சில அரசியல் கட்சியினர் முயற்சித்து வருகின் றனர். பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ள இந்த பஞ்சாயத்தை பெண்களுக்கு மட்டுமே ஒதுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறி யிருந்தார்.

இம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘‘ மனுதாரர் அளித்துள்ள மனு மீது உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியிடுவதற்கு முன்பே மாநில தேர்தல் ஆணை யமும், தமிழக அரசும் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ என உத்தரவிட் டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x