Published : 26 Jan 2014 05:39 PM
Last Updated : 26 Jan 2014 05:39 PM
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியை அடுத்த கொண்டல் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளியில் பயின்று வரும் பத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் அதே பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றும் மூவேந்தன் என்பவரால் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாக்கப் பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இச்செய்தி மிகுந்த வருத்தமும், வேதனையும் அளிக்கிறது. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தற்காலிக ஆசிரியர் மூவேந்தனை உடனடியாக தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். அவருக்கு துணையாக இருந்த பள்ளியின் மற்ற ஆசிரியர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT