Last Updated : 13 Oct, 2014 03:50 PM

 

Published : 13 Oct 2014 03:50 PM
Last Updated : 13 Oct 2014 03:50 PM

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு ஐ.நா. கண்டனம்

பாலஸ்தீனத்தின் மெற்கு கரைப் பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து ஆக்கிரமித்து வருவது கண்டிக்கத்தக்கது என்று ஐ.நா. பொது செயலாளர் பான் கீ மூன் தெரிவித்தார்.

பாலஸ்தீன பிரதமர் ரமி ஹம்தல்லாவை திங்கட்கிழமை ஜெருசுலெத்தில் ஐ.நா. பொது செயலாளர் பான் கீ மூன் சந்தித்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, "பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேலியர்கள் குடியேறுவது கண்டிக்கத்தக்கது, மேற்குக் கரைப் பகுதியிலும் உங்கள் நாடு செய்து வரும் ஆக்கிரமிப்பு சர்வதேச கண்டனங்களுக்கு உரியதாக உள்ளது.

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நாடு அத்துமீறி கொண்டிருப்பதை ஐ.நா. கூர்ந்து கவனிக்கிறது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x