Published : 21 Nov 2015 08:05 PM
Last Updated : 21 Nov 2015 08:05 PM

கோவன் ஜாமீனுக்கு எதிராக அரசு அப்பீல்: ஸ்டாலின் கண்டனம்

பாடகர் கோவனின் ஜாமீனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளதற்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் முகநூலில் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''மதுக்கடைகளை மூட வேண்டி மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த கோவன் மூடு டாஸ்மாக்கை மூடு என்ற பாடலை பாடினார். இதையடுத்து தமிழக அரசு அவர் மீது தேசத்துரோக வழக்கப்பதிவு செய்து சிறையில் அடைத்தது. கோவனை சிறையில் எடுத்து விசாரிக்க காவல்துறை உயர் நீதிமன்றத்தை அணுகியது.

கோவனுக்கு நக்சல்களுடன் தொடர்பு இருப்பதாக அரசு வழக்கறிஞர் கூறியதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறிய, உயர் நீதிமன்றம், ‘தகவல் தொழில்நுட்பச் சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய என்ன காரணம் என்று கண்டனம் தெரிவித்தது.

மேலும், கோவனை போலீஸ் காவலில் அனுப்பவும் உயர் நீதிமன்றம் மறுத்தது. கோவன், ஜாமீனில் வெளி வந்துள்ளதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

இது அரசியல் சட்டம் வழங்கியுள்ள கருத்து சுதந்திரத்துக்கு எதிரான போக்காகும். இது கண்டிக்கத்தக்கது'' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x