Published : 24 Mar 2017 09:31 PM
Last Updated : 24 Mar 2017 09:31 PM

கருணாஸ் கட்சி நிர்வாகிகள் கூண்டோடு கலைப்பு

முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், தன் கட்சியின் நிர்வாகிகளை கூண்டோடு கலைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

திருவாடாணை தொகுதி எம்எல்ஏவும், முக்குலத்தோர் புலிப்படையின் தலைவருமான கருணாஸ், இது தொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில், ''என் தலைமையிலான முக்குலத்தோர் புலிப்படையின் மாநில நிர்வாகிகள் கூண்டோடு கலைக்கப்பட்டனர். விரைவில் மாவட்ட ஒன்றிய, நகர நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்படும். அதற்குப்பின் புதிய நிர்வாகிகள் குறித்த அறிவிப்பு வெளியாகும். ஏற்கெனவே நிர்வாகிகளாக செயல்பட்டவர்கள் என் அதிகாரபூர்வ அனுமதி கடிதம் இல்லாமல் தற்காலிகமாகவே செயல்பட்டது குறிப்பிடத்தக்கது'' என்று அதில் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை கருணாஸ் தன் அமைப்பில் உள்ளவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x