Published : 27 Feb 2017 09:06 AM
Last Updated : 27 Feb 2017 09:06 AM

கிழக்கு கடற்கரை சாலையில் பந்தயம்? - விலை உயர்ந்த 10 கார்கள் பறிமுதல்

கானத்தூர் அடுத்த உத்தண்டி சுங்கச்சாவடி அருகே போக்கு வரத்து போலீஸாரின் வாகன தணிக்கையின்போது, கிழக்கு கடற்கரைச் சாலையில் பந்தயத் துக்காக அதிவேகமாக சென்ற 10 கார்களை மடக்கிப் பிடித்து பறிமுதல் செய்த போலீஸார், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் நீலாங்கரை மற்றும் மாமல்லபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள கிழக்கு கடற்கரைச் சாலையில், இரு சக்கர வாகனம் மற்றும் கார் ஆகிய வாகனங்கள், பந்தயத் துக்காக அதிவேகமாக ஓட்டிச் செல்லப்படுவதாக பொதுமக்கள் அடிக்கடி புகார் தெரிவித்து வந்தனர்.

இதன்பேரில், கானத்தூர் அடுத்த உத்தண்டி அருகே சுங்கச்சாவடியில் நேற்று அதிகாலை நீலாங்கரை போக்குவரத்து காவல் ஆய்வாளர் சவுந்தரராஜன் தலைமையிலான போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கி 10-க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த கார்கள் அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது. இந்த வாகனங்களை போலீஸார் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.

போலீஸ் விசாரணையில் வாகனங்களை ஓட்டி வந்தது, சென்னையின் பல்வேறு பகுதி களைச் சேர்ந்த முகேஷ், விக்னேஷ், சித்தார்த், விஷால், பிரசன்னா, ராஜகோபால், சங்கர், யஷ்வந்த், ராகவேந்தர், தினேஷ் ஆகியோர் என தெரியவந்தது. இவர்களிடம் போக்குவரத்து ஆய் வாளர் விசாரித்துக் கொண்டி ருந்தபோதே, ஒருவர் வாகனத்தை எடுத்துச் செல்ல முற்பட்டதாகவும், அதைத் தடுக்க முயன்றபோது போக்குவரத்து ஆய்வாளரின் காலில் காயம் ஏற்பட்டதாகவும் போலீஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இதையடுத்து 10 கார்களையும் போலீஸார் பறிமுதல் செய்து கானத்தூர் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தி வருகின் றனர்.

போலீஸார் கார்களை மடக்கி பிடித்தபோது, ‘கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கார்களை காவல் நிலையத்துக்கு கொண்டு வரச் சொல்வதா’ என அவர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக போலீஸ் வட்டாரங்களில் கூறப் படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x