Published : 07 Mar 2017 09:20 AM
Last Updated : 07 Mar 2017 09:20 AM

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது: முதல் நாளில் விற்பனை மந்தம்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப் பங்கள் மார்ச் 6 முதல் 22-ம் தேதி வரை வழங்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. அதன்படி தகுதித் தேர்வு விண்ணப்ப விநியோகம் தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கியது. முதல் நாளில் விண்ணப்பம் வாங்க வந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. சென்னை மட்டுமின்றி புறநகர் பகுதிகளில் இதே நிலைதான் காணப்பட்டது. ஒரு நபருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்பட்டது. இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கும் (தாள்-1), பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வுக்கும் (தாள்-2) அனைத்து மையங் களிலும் தனித்தனி விற்பனை கவுன்டர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் இணைய தளத்தில் (www.trb.tn.nic.in) அறிவித் துள்ள இடங்களில் வரும் 22-ம் தேதி வரை விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ள லாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங் களை பெற்றுக்கொள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் அதற்கென குறிப்பிட்ட மையங்கள் இயங்குகின்றன. விண்ணப்ப தாரர்கள் விண்ணப்பம் வாங்கிய மாவட்டத்தில் உள்ள மையங்களில் வருகிற 23-ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 29-ம் தேதி அன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரையும், பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 30-ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும் நடைபெற உள்ளன. இரு தகுதித் தேர்வுகளுக்கும் சேர்த்து ஏறத் தாழ 11 லட்சம் பேர் விண்ணப்பிப்பார்கள் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் எதிர் பார்க்கிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப் பிப்போருக்கு ஹால்டிக்கெட் தபாலில் அனுப்பப்படாது. தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் இருந்து ஹால்டிக் கெட்டை விண்ணப்பதாரர்கள்தான் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்கெனவே தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x