Published : 03 Jun 2017 10:35 AM
Last Updated : 03 Jun 2017 10:35 AM
நீலகிரி மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. உதகையில் சுமார் 3 மணி நேரம் பெய்த கன மழை காரணமாக தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
உதகையில் கடந்த ஒரு மாதமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக மேக மூட்டம் மற்றும் அவ்வப்போது மழை பெய்தது.
நேற்று மதியம் முதல் உதகை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் கன மழை பெய்யத் தொடங்கியது.
குறிப்பாக, கிரீன்பீல்டு மற்றும் லோயர் பஜார் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் குடியிருப்புகளில் மழை நீர் புகுந்தது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
மார்க்கெட் பகுதிகளில் மழை நீர் புகுந்த நிலையில், வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர். கன மழை காரணமாக இரண்டு மணி நேரம் உதகை ஏரியில் படகு சவாரி ரத்து செய்யப்பட்டது. கோடை மழை பொய்த்ததால் மாவட்டத்தில் உள்ள அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு குறைந்துள்ளது. பருவமழை பெய்தால் மட்டுமே குடிநீர் மற்றும் மின் உற்பத்தி சிக்கல் இல்லாமல் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT