Published : 18 Sep 2016 08:53 AM
Last Updated : 18 Sep 2016 08:53 AM

கடலோர காவல்படை சார்பில் மெரினா கடற்கரையை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி

சர்வதேச கடற்கரை தூய்மைப் படுத்தும் தினத்தை முன்னிட்டு கடலோர காவல்படை சார்பில் நேற்று மெரினா கடற்கரையை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சி நடை பெற்றது.

ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 3-வது சனிக்கிழமை சர்வ தேச கடற்கரை தூய்மைப்படுத்தும் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று இந்தியக் கடலோர காவல் படை சார்பில் சென்னை மெரினா மற்றும் எலியட்ஸ் கடற்கரையை தூய்மைப் படுத்தும் நிகழ்ச்சி நடை பெற்றது.

சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மைலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ. ஆர்.நட்ராஜ், கிழக்குப் பிராந்திய கடலோர காவல் படை ஐ.ஜி., ராஜன் பர்கோத்ரா, சிண்டிகேட் வங்கியின் பொது மேலாளர் நர்சிங்மா ராவ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

கடலோர காவல்படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, என்சிசி மாணவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என சுமார் 3 ஆயிரம் பேர் இதில் பங்கேற்று தூய்மைப் பணியை மேற்கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய சிறப்பு விருந் தினர்கள், உலகிலேயே 2-வது மிகப் பெரிய கடற்கரையான மெரி னாவை தூய்மையாகவும், கடல் அரிப்பை தடுக்கும் வகையில் பாதுகாப்பாகவும் வைத்திருக்க வேண்டும். அனைத்துவிதமான சுற்றுச்சூழல் சீர்கேட்டில் இருந்தும் இக்கடற்கரையை பாதுகாக்க வேண்டும்’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x