Published : 18 Mar 2017 10:15 AM
Last Updated : 18 Mar 2017 10:15 AM

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 22-ம் தேதி ஆஜராவேன்: போலீஸ் ஆணையர் ஜார்ஜ் உத்தரவாதம்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வரும் மார்ச் 22-ம் தேதி நேரில் ஆஜராவேன் என உயர் நீதிமன்றத்தில் சென்னை போலீஸ் ஆணையர் எஸ்.ஜார்ஜ் உத்தரவாதம் அளித்தார்.

சென்னை மாநகராட்சி 196-வது வார்டு அதிமுக கவுன்சிலர் அண்ணாமலை. இவருக்கு சொந்தமாக ஏராளமான வீடுகள் உள்ளதாகவும், இந்த சொத்துக்களை தனது வேட்புமனுவில் மறைத்து விட்டதாகவும், அவற்றிற்கு சொற்ப தொகையையே வரியாக செலுத்தி மாநகராட் சிக்கு இழப்பு ஏற்படுத்தியதாகவும் ஈஞ்சம்பாக்கத் தைச் சேர்ந்த பொன்.தங்கவேலு என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கவுன்சிலர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறைக்கும், மாநில தேர்தல் ஆணையத்திற்கும் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை தொடர்ந்த காரணத்திற்காக மனுதாரரான பொன்.தங்கவேலுவிற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.

ஆனால் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தனக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கவில்லை எனக்கூறி பொன்.தங்கவேலு நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தார். நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணை நீதிபதி என்.கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை போலீஸ் ஆணையர் எஸ்.ஜார்ஜ் நேரில் ஆஜராகவில்லை. இதை யடுத்து ஜார்ஜுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி அவர் எப்போது ஆஜராவார்? என்பதை கேட்டு தெரிவிக்க உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று முதல் வழக்காக பட்டிய லிடப்பட்டு இருந்தது. அப் போது நீதிபதி என்.கிருபாகரன் முன்பாக ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்கறி ஞர் வெங்கட்ரமணி, போலீஸ் ஆணையர் எஸ்.ஜார்ஜ் வரும் மார்ச் 22-ம் தேதி நேரில் ஆஜராக இருப்பதாக உத்தரவாதம் அளித்துள்ளார் என்றார். அப்போது அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதி இந்த வழக்கை வரும் மார்ச் 22-க்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x