Published : 15 Jun 2017 10:20 AM
Last Updated : 15 Jun 2017 10:20 AM
சட்டப்பேரவையில் பிரச்சினை செய்வது திமுகவுக்கு வழக்கம் ஆகிவிட்டது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விமர்சனம் செய்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இரண்டாவது நாளாக இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. பள்ளிக் கல்வி, உயர் கல்வி, இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை குறித்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.
இந்நிலையில் தலைமைச் செயலகம் வந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ''சட்டப்பேரவையில் பிரச்சினை செய்வது திமுகவுக்கு வழக்கம் ஆகிவிட்டது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் அதைப் பற்றிப் பேசக் கூடாது என்று திமுகவினர் அடிக்கடி கூறி வந்தனர்.
ஆனால், பண பேரம் தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று திமுகவினர் கோரிக்கை விடுத்தனர். அப்போது நீதுமன்றத்தில் வழக்கு உள்ளதால் அதைப் பற்றி பேச வேண்டாம் என்று சபாநாயகர் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT