Published : 18 Apr 2017 08:13 AM
Last Updated : 18 Apr 2017 08:13 AM
கடந்த 2011-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றார். இந்த வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி அவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியி்ட்ட சைதை துரைசாமி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்காக மு.க.ஸ்டாலினும், சைதை துரைசாமியும் பலமுறை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். இந்த வழக்கில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி யும் நேரில் ஆஜராகி,கொளத்தூர் தொகுதியில் கடந்த 2011 தேர்தலில் மு.க.ஸ்டாலின் தரப்பில் செய்யப்பட்ட தேர்தல் செலவு கணக்கு விவரங்களையும் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், நேற்று இந்த வழக்கு விசாரணை நீதிபதி எம்.வேணுகோபால் முன்பு நடந் தது. அப்போது சைதை துரைசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக் கறிஞர் டி.வி.ராமானுஜம் மற்றும் வழக்கறிஞர் கே.சவுந்திரராஜன் ஆகியோர், ‘‘மு.க.ஸ்டாலின் தேர்தல் செலவாக ரூ. 3.25 லட்சம் மட்டுமே செலவு செய்திருப்பதாக கூறியுள்ளார். ஆனால் அவர் அந்த தேர்தலில் ரூ. ஒரு கோடிக்கு மேல் பணம் செலவழித்துள்ளார். அதற்கான சிடி உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களையும் நாங்கள் ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள் ளோம். தேர்தலுக்கு முதல்நாள் மனுதாரரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், மனுதாரர் குறித்து வந்த ஒரு செய்தியை மு.க.ஸ்டாலின் வேண்டுமென்றே தொகுதி முழுவ தும் நகல் எடுத்து வழங்கியுள்ளார். இதன்மூலம் மனுதாரருக்கு உள்ள நல்ல பெயரை சீர்குலைத்ததன் மூலம், சொற்ப வாக்கு எண்ணிக்கையில்தான் மனுதாரர் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார். எனவே மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும்’’ என வாதிட்டனர்.
இதையடுத்து, மு.க.ஸ்டாலின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராகி வாதிட இருப்பதாக காலஅவகாசம் கோரப்பட்டதை யடுத்து, இந்த வழக்கு விசாரணையை நாளைக்கு(ஏப்.19) தள்ளிவைத்து நீதிபதி உத்தர விட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT