Published : 02 Jun 2017 10:36 AM
Last Updated : 02 Jun 2017 10:36 AM
திருக்கோவிலூர் அருகே தி.அத்திப் பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனை அருகில் உள்ள காலி இடத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முள்வேலி களை அகற்றியுள்ளனர். மீதமுள்ள பணிகளை நேற்று காலை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றினர். அப்போது மண்ணில் புதைந்திருந்த லிங்கம் மற்றும் ஆவுடைகளை கண்டெடுத்தனர். மேலும் அங்கிருந்த பார்வதி குளத்தில் தோண்டியபோது இரண்டு பூதேரி சிலைகளும் கண்டெடுக்கப்பட்டன. அதில் ஒரு சிலையின் தலைப்பகுதி சேதமடைந்த நிலையில் இருந்தது. இச்சிலைகள் கி.பி 14-ம் நூற்றாண்டு கால சிலைகள் என கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT