Published : 05 Jan 2014 01:44 PM
Last Updated : 05 Jan 2014 01:44 PM

மீனவர்கள் பாதுகாப்புக்கு துப்பாக்கி வழங்க வேண்டும்: பழ.நெடுமாறன்

தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கு துப்பாக்கி வழங்க வேண்டும் என உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

ராமேஸ்வரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பழ. நெடுமாறன்:"மீனவர்கள் பிரச்சனை தீரவும் அவர்களின் பாதுகாப்புக்காகவும் அவர்களுக்கு துப்பாக்கி வழங்கப்பட்டு, அவற்றை கையாள பயிற்சியும் அளிக்கப்பட வேண்டும். தமிழக மீனவர்கள் நலன் பாதுகாக்க மீனவர் பாதுகாப்பு படை ஒன்று அமைக்கப்பட வேண்டும்" என்றார்.

காங்கிரஸ் தோற்பது உறுதி:

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, இலங்கை இறுதிப் போரில் ஈழத்தமிழர்கள் கொல்லபட்ட முழு விபரங்கள் தெரியாத நிலையிலேயே காங்கிரஸ் கட்சி தோற்கடிக்கப்பட்டது. தற்போது மக்கள் இவ்விவகாரத்தில் நிறைய அறிந்து கொண்ட நிலையில் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் அதோடு கூட்டணி வைக்கும் மற்ற கட்சிகளும் முற்றிலுமாக தோற்கடிப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x