Published : 19 Jan 2017 01:23 PM
Last Updated : 19 Jan 2017 01:23 PM

ஜல்லிக்கட்டு பிரச்சினையில் தமிழக அரசின் நடவடிக்கையை விரைவில் காண்பீர்கள்: முதல்வர் ஓபிஎஸ்

ஜல்லிக்கட்டு பிரச்சினையில் தமிழக அரசின் நடவடிக்கையை விரைவில் காண்பீர்கள் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.

டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தது தொடர்பான விவரங்களை செய்தியாளர்கள் சந்திப்பில் விவரித்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இவ்வாறு கூறினார்.

அவர் கூறும்போது, "ஜல்லிகட்டு விளையாட்டு நடத்துவது தொடர்பாக தமிழகத்தின் தார்மீக உரிமையை பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்தேன். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக சட்டத் திருத்தத்தை கொண்டுவர வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தினேன்.

தமிழக அரசின் கோரிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி கவனமாக கேட்டுக் கொண்டார். ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

அதேவேளையில், ஜல்லிக்கட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதை சுட்டிக் காட்டினார். மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என பிரதமர் என்னிடம் உறுதியளித்தார்.

இனி, ஜல்லிக்கட்டு பிரச்சினையில் தமிழக அரசின் நடவடிக்கையை விரைவில் காண்பீர்கள். ஜல்லிக்கட்டு நடத்த தேவையான நடவடிக்கையை மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு விரைவில் எடுக்கும். நன்மையே யாவும் நன்மையாகவே முடியும். பொறுமையாக இருங்கள்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x