Published : 18 Jan 2014 04:15 PM
Last Updated : 18 Jan 2014 04:15 PM

தமிழக மீனவர்கள் 60 பேர் விடுதலை: இலங்கை மல்லாகம் நீதிமன்றம் உத்தரவு

தமிழக மீனவர்களை 60 பேர்களை இலங்கை மல்லாகம் நீதிமன்றம் சனிக்கிழமை விடுதலை செய்து உத்திரவிட்டது.

கடந்த நவம்பர் 5 அன்று கோடியக்கரையிலிருந்து 20 நாட்டிகல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த 17 மீனவர்களையும் அவர்களின் 4 படகுகளையும், கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் தீவைச் சேர்ந்த 13 மீனவர்களை 3 படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து மீனவர்களின் வலைகளையும், பிடித்து வைத்திருந்த மீன்களையும் கைப்பற்றினர்.

பின்னர், கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் ஜனவரி 29 வரை நீதிமன்ற காவலில் வைக்க மல்லாகம் நீதிமன்றம் உத்திரவிட்டது.

அதே போன்று கடந்த டிசம்பர் 12ம் தேதி அதிகாலை நெடுந்தீவுப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 30 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்தனர்.

இந்திய-இலங்கை இருநாட்டு அமைச்சர்களுக்கிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் நீதிமன்ற காவல் முடிவதற்கு முன்னதாகவே சனிக்கிழமை மல்லாகம் நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் தமிழக மீனவர்கள் 60 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். மீனவர்கள் அனைவரையும் நீதிபதி கஜநிதிபாலன் விடுதலை செய்து உத்திரவிட்டார்.

கடந்த ஜனவரி 14 அன்று 52 மீனவர்களும், ஜனவரி 17 அன்று 121 மீனவர்களும், சனிக்கிழமை 60 மீனவர்களும் என இதுவரை இலங்கை நீதிமன்றங்களினால் கடந்த ஐந்து தினங்களில் 233 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதில் 51 மீனவர்கள் தாயகம் திரும்பி விட்டனர். மேலும் 182 மீனவர்கள் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x