Published : 09 May 2017 09:06 AM
Last Updated : 09 May 2017 09:06 AM
டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிராக அமைதியாக போராட்டம் நடத்து பவர்களை கைது செய்யவோ, நடவடிக்கை எடுக்கவோ கூடாது என காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூரைச் சேர்ந்த டி.விக் னேஷ் உள்ளிட்ட சிலர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை அதிகாரிகள் இடம்மாற்றம் செய்வதை தடுக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோரைக் கொண்ட அமர்வு பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறியிருப்பதாவது:
டாஸ்மாக் கடைகளை திறக்கும் அல்லது இடம்மாற்றம் செய்யும் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதில் போலீஸார் ஆர்வம் காட்டுவதாகவும், போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும் மனுதாரர் கள் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் வெங்கடரமணி, வன்முறையில் ஈடுபடுவோர் மற்றும் பொது மக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிப்போர் மீது மட்டுமே போலீஸார் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், மதுவால் பாதிக் கப்பட்ட பெரும்பாலான பெண்கள் தான் மதுக்கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் என்பது ஊடகங் களில் வெளியாகும் செய்திகள், நீதிமன்றத்தில் தொடரப்படும் வழக்குகள் மூலம் தெரியவருகிறது. எனவே, இந்தச் சூழ்நிலையை அதிகாரிகள் கவனமுடன் கையாள வேணடும்.
குடும்பங்களை சிதைக்கும் மதுக்கடைகளை திறப்பதற்கும், இடம் மாற்றுவதற்கும் ஆர்வம் காட்டுவதற்கு பதில், மக்களின் உணர்வுகளுக்கு அதிகாரிகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். குடியிருப்புப் பகுதிகளில் டாஸ் மாக் கடைகளை திறக்கவும், இடம் மாற்றம் செய்யவும் தடை விதிக்கப்படுகிறது. மேலும், கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அந்தப் பகுதியில் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது.
டாஸ்மாக் கடைகளை திறப்பது, இடம்மாற்றம் செய்வதை எதிர்த்து பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்றால், போராட்டக்காரர்களை காவல் துறையினர் கைது செய்யவோ, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ கூடாது.
இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT