Published : 26 Oct 2014 01:23 PM
Last Updated : 26 Oct 2014 01:23 PM
தமிழக பாஜக பொதுக்குழுக் கூட்டம், நவம்பர் முதல் வாரத்தில் நடக்கும் என்று கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் தமிழக பாஜக பொதுக்குழுக் கூட்டம் இன்று நடப்பதாக அறிவிக்கப் பட்டிருந்தது. இதில் தமிழக பாஜகவின் புதிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ராஜீவ் பிரதாப் ரூடி பங்கேற்பார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், பொதுக்குழுக் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ‘தி இந்து’விடம் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று கூறியதாவது: தமிழக பாஜக பொதுக்குழுக் கூட்டம் பூந்தமல்லியில் 26-ம் தேதி நடக்கவிருந்தது. இதில் கட்சியின் தேசிய நிர்வாகிகளும் புதிய பொறுப்பாளராக நியமிக்கப் பட்டுள்ள ராஜீவ் பிரதாப் ரூடியும் பங்கேற்க இருந்தனர். இந்நிலையில், டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணித் தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று, தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
இதில், பாஜகவின் மூத்த தலைவர்கள், தேசிய நிர்வாகிகள், மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள் கலந்து கொள்கின்றனர். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக பாஜக பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைத்துள்ளோம்.
இந்தக் கூட்டத்தை நவம்பர் முதல் வாரத்தில் நடத்த திட்டமிட் டுள்ளோம். இதுதொடர்பாக பாஜக தலைமையிடமும் தெரிவித்துள் ளோம். இவ்வாறு தமிழிசை கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT