Published : 23 Sep 2016 08:38 AM
Last Updated : 23 Sep 2016 08:38 AM
திரு.வி.க. நகரில் போதையில் தகராறு செய்த கணவனை மரக் கட்டையால் அடித்து கொன்ற மனைவி, போலீஸில் சரண் அடைந்தார்.
சென்னை திரு.வி.க. நகர் கே.சி.கார்டன் முதலாவது தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (52). இவரது மனைவி நிர்மலா தேவி (45). லோகேஸ்வரன் (22), லோகப்ரியன் (12) என இரு மகன்கள் உள்ளனர். லோகேஸ் வரன் பொறியியல் படிப்பை முடித்துள்ளார். லோகப்ரியன் 7-ம் வகுப்பு படிக்கிறார்.
ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் ரவிச்சந்திரனுக்கு தின மும் மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக் கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவும் மது குடித்துவிட்டு, வீட்டுக்கு வந்த ரவிச்சந்திரன், மனைவி நிர்மலா தேவியுடன் தகராறில் ஈடுபட்டி ருக்கிறார். வாக்குவாதம் முற்றிய நிலையில் அருகே இருந்த மரக்கட்டையை எடுத்து மனைவியை தாக்கியிருக்கிறார் ரவிச்சந்திரன்.
இதில் ஆத்திரம் அடைந்த நிர்மலா தேவி, அதே மரக் கட்டையை பிடுங்கி கணவர் ரவிச் சந்திரனை தாக்கினார். தலை மற்றும் முகத்தில் கட்டையால் அடித்தார். தலையில் இருந்து ரத்தம் வந்த நிலையில், ரவிச் சந்திரன் மயங்கி விழுந்தார். பரிசோதனை செய்த மருத்துவர்கள் ரவிச்சந்திரன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த தகவல் கிடைத் ததும் திருவிக நகர் போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அவர்களிடம் நிர்மலா தேவி சரண் அடைந்தார். அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ரவிச் சந்திரன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தந்தை இறந்த நிலையில், தாயும் சிறைக்கு சென்று விட்டதால், இரு மகன்களும் செய்வதறியாமல் தவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT