Published : 16 Dec 2013 10:00 AM
Last Updated : 16 Dec 2013 10:00 AM

மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளையும் பிடிப்போம்: அதிமுக அமைச்சர்கள் பேச்சு

மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் என ஏற்காடு இடைத்தேர்தல் நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் அமைச்சர்கள் பேசினர்.

ஏற்காடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் சரோஜாவை வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் சனிக்கிழமை இரவு வாழப்பாடி பஸ் நிலையம் அருகே நடந்தது. கூட்டத்துக்கு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் இடைப்பாடி பழனிச்சாமி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம், மோகன் மற்றும் எம்.பி., செம்மலை உள்பட பலர் கலந்து கொண்டனர். அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:

வரும் மக்களவைத் தேர்தலில் தமிழக மக்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. ஏற்காடு தேர்தலில் மிகப்பெரிய அடித்தளத்தை உருவாக்கி தந்துள்ளீர்கள். இதன் மூலம் மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்றார்.

வீட்டுவசதித்துறை அமைச்சர் வைத்தியலிங்கம்

ஒவ்வொரு இடைத்தேர்தலிலும் வாக்கு வித்தியாசம் அதிகரித்து வருகிறது. இது முதல்வர் ஜெயலலிதாவின் செல்வாக்கை காண்பிக்கிறது. இதுபோல் வருகிற மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுகதான் வெற்றி பெறும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x