Published : 12 May 2017 08:03 AM
Last Updated : 12 May 2017 08:03 AM

உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் கண்காணிப்பு: கர்ணனின் மகனிடம் கொல்கத்தா போலீஸார் விசாரணை - நேபாளம், வங்கதேசத்துக்கு தப்பியதாக தகவல்

தலைமறைவாக இருக்கும் நீதிபதி கர்ணனைப் பிடிக்க சென்னை போலீஸாருடன் இணைந்து கொல் கத்தா போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் வசிக்கும் அவரது மகனிடமும் விசாரணை நடத்தினர்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் கிஷண் கவுல் உட்பட பல்வேறு நீதிபதிகள் மீது நீதிபதி கர்ணன் ஊழல் புகார் கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தியது. தற்போது கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ள கர்ணனுக்கு மனநல பரிசோதனை நடத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர் தலைமையிலான அமர்வு அண்மையில் உத்தரவிட் டது. அதற்கு பதிலடியாக தலைமை நீதிபதி கேஹர் உள்ளிட்டோருக்கு மனநல பரிசோதனை நடத்த நீதிபதி கர்ணன் உத்தரவிட்டார்.

இந்நிலையில், எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தலைமை நீதிபதி கேஹர் மற்றும் 6 நீதிபதிகளுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி கர்ணன் கடந்த 8-ம் தேதி உத்தரவு பிறப்பித்தார். அதைத் தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதி கர்ணனை கைது செய்து 6 மாதம் சிறையில் அடைக்க கொல்கத்தா காவல் துறைக்கு உச்ச நீதிமன்றம் 9-ம் தேதி உத்தரவிட்டது.

இதற்கிடையே, 9-ம் தேதி காலை சென்னை வந்த நீதிபதி கர்ணன், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். அவரை கைது செய்வதற்காக மேற்கு வங்க டிஜிபி சுரஜித்கர் புர்கயஷா தலைமையிலான தனிப் படை போலீஸார், நேற்று முன்தினம் காலை விமானத்தில் சென்னை வந்தனர். இந்த தனிப்படையில், போலீஸ் அதிகாரிகள் சுக்மால் காந்திதாஸ், ராஜ் கனோஜியா, ரன்பீர்குமார், சுதாகர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தன்னை கைது செய்வதற்காக தனிப்படை வருவதை அறிந்த நீதிபதி கர்ணன், மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரின் காரில் நள்ளிரவில் புறப்பட்டுச் சென்றுவிட்டார். அவர் ஆந்திர மாநிலம் காளஹஸ்தி, தடா ஆகிய பகுதிகளுக்கு சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தில் கொல்கத்தா போலீஸாருடன் இணைந்து தமி ழக போலீஸாரும் ஆந்திரா சென்ற னர். ஆனால், கர்ணனை அவர் களால் பிடிக்க முடியவில்லை. அதைத் தொடர்ந்து அவர்கள் சென் னைக்கே திரும்பி வந்துவிட்டனர்.

சென்னை சூளைமேடு சவு ராஷ்டிரா நகர் முதல் தெருவில் நீதிபதி கர்ணனின் மகன் சுகன் (37) வசிக்கிறார். கொல்கத்தா போலீஸார் இந்த வீட்டில் நேற்று சோதனை நடத்தினர். கர்ணன் தலைமறைவாக இருக்கும் இடம் குறித்து சுகனிடம் கேட்டுள்ளனர். ஆனால், தனக்கு எதுவும் தெரியாது என்று அவர் கூறியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

நீதிபதி கர்ணனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சென்னையில் நிறைய பேர் உள்ளனர். அங்குதான் அவர் தலைமறைவாக இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர். இதனால், தமிழக போலீஸாரின் உதவியுடன் சென்னை முழுவதும் கொல்கத்தா போலீஸார் நேற்று தேடுதல் வேட்டை நடத்தினர். பல இடங் களில் தமிழக போலீஸார் மட்டும் தேடினர். ஆனால் கர்ணன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. எனினும், கர்ண னின் உறவினர்கள், நண்பர்களின் வீடுகளை தொடர்ந்து கண் காணித்து வருகின்றனர். அவ ருடன் இருந்த மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் குறித்தும் போலீ ஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, 6 மாத சிறை தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நீதிபதி கர்ணன் சார்பில் அவரது வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தப்பிச் சென்றாரா?

சென்னை சேப்பாக்கம் விருந் தினர் மாளிகைக்கு நேற்று மாலை 4 மணியளவில் கொல்கத்தா போலீஸார் வந்தனர். அங்கு, நீதிபதி கர்ணன் தங்கியிருந்த அறையில் சோதனை நடத்தினர். வருகை பதிவேட்டையும் ஆய்வு செய்தனர். கர்ணனின் பாதுகாவலர் அனந்தகுமார் இன்னும் விருந்தினர் மாளிகையிலேயே இருக்கிறார். அவரிடம் கொல்கத்தா போலீஸார் விசாரணை நடத்தினர்.

உயர் நீதிமன்ற நீதிபதிக்கு தண்டனை விதித்தது குறித்து குடியரசுத் தலைவரிடம் முறையிட இருக்கிறோம் என்று கர்ணனின் வழக்கறிஞர் ரமேஷ் குமார் தெரிவித்து இருக்கிறார்.

இந்நிலையில் கர்ணன் நேபா ளம் அல்லது வங்கதேசம் சென்று தலைமறைவாக இருக் கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x