Published : 10 Jun 2017 09:42 AM
Last Updated : 10 Jun 2017 09:42 AM
சென்னை தி.நகரில் உள்ள வித் யோதயா காலனியைச் சேர்ந்த ஸ்ரீரங்கன், அண்ணாமலை ஆகி யோர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்த தாவது:
சென்னை தி.நகர் அபிபுல்லா சாலை - பிரகாசம் தெருவை இணைக்கும் 33 அடி அகல பொதுப் பாதையை நடிகர் சங்கத்தினர் ஆக் கிரமித்து சட்டவிரோதமாக கட்டி டம் கட்டிவருகின்றனர். இதனால் வித்யோதயா காலனியில் குடி யிருப்பவர்கள் பிரகாசம் சாலைக் குச் செல்ல வழி இல்லாமல், சுற்றிச் செல்ல நேரிடுகிறது.
அந்த 33 அடி பொதுப் பாதையை அதிகாரிகள் சட்டவிரோதமாக நடிகர் சங்கத்துக்கு பட்டா பதிவு செய்து கொடுத்துள்ளனர். எனவே, 33 அடி சாலையை ஆக்கிரமித்து நடிகர் சங்கம் கட்டிடம் கட்ட தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கோரியிருந் தனர்.
நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்தது. இது தொடர்பான உண்மை நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வழக்கறிஞர் ஆணையராக இளங்கோவை நிய மித்தனர். அதுவரை கட்டுமானப் பணிகளை தொடரக் கூடாது எனவும் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், வழக்கறிஞர் ஆணையர் இளங்கோ, நடிகர் சங்க கட்டிடத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தார். ‘நடிகர் சங்க கட்டிடம் பொதுப் பாதையை ஆக்கிரமித்து கட்டப்படவில்லை. அப்பகுதியில் பாதை இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை’ என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
அப்போது மனுதார் தரப்பு வழக் கறிஞர், ‘‘வழக்கறிஞர் ஆணை யரின் இந்த அறிக்கை ஒருதலை பட்சமானது. இதுதொடர்பாக விரி வாக வாதிடத் தயாராக இருக் கிறோம்’’ என்றார்.
நடிகர் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதா ரம் அற்றவை. அவர் உள்நோக்கத் துடன் செயல்படுகிறார்’’ என்றார்.
இதையடுத்து, வழக்கின் இறுதி விசாரணையை வரும் 16-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT