Published : 28 Jun 2016 08:51 AM
Last Updated : 28 Jun 2016 08:51 AM
எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு நடத்தப்படும் சிறப்பு துணை பொதுத்தேர்வு ஜுன் 29-ம் தேதி தொடங்கி ஜுலை 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதற்கான காலஅட்டவணையை அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-
ஜுன் 29 (புதன்கிழமை) - தமிழ் முதல் தாள்
ஜுன் 30 (வியாழன்) - தமிழ் 2-ம் தாள்
ஜூலை 1 (வெள்ளி) - ஆங்கிலம் முதல் தாள்
ஜூலை 2 (சனி) - ஆங்கிலம் 2-ம் தாள்
ஜூலை 4 (திங்கள்) - கணிதம்
ஜூலை 5 (செவ்வாய்) - அறிவியல்
ஜூலை 6 (புதன்) - சமூக அறிவியல்
ஜூலை 8 (வெள்ளி) - விருப்ப மொழித்தாள்
தேர்வுகள் தினமும் காலை 9.15 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT