அமோனியா வாயு கசி​வால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதி: முதல்வர் அறிவிப்பு

அமோனியா வாயு கசி​வால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதி: முதல்வர் அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: அமோனியா வாயு கசி​வால் உயி​ரிழந்த 2 பெண்​களின் குடும்​பத்​தினருக்கு தலா ரூ.2 லட்​சம் நிதி​யுதவி வழங்​க​வும், விபத்து குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்​கல் செய்ய 3 பேர் குழு​வை​யும் அமைத்து முதல்​வர் விஜய் உத்​தர​விட்​டுள்​ளார்.

இதுதொடர்​பாக முதல்​வர் விஜய் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: திரு​வள்​ளூர் மாவட்​டம் கன்​னிகைப்​பேர் கிராமத்​தில் தனி​யார் மீன் உணவு ஏற்​றுமதி தொழிற்​சாலை​யின் உற்​பத்தி பிரி​வில் எதிர்​பா​ராத​வித​மாக அமோனியா வாயு கசிவு ஏற்​பட்​ட​தில், அங்கு பணி​யில் இருந்தவர்கள் பாதிக்​கப்​பட்​டனர். இந்த விபத்​தில் துர​திர்​ஷ்ட​வச​மாக 2 பெண்​கள் உயி​ரிழந்​து​விட்​டனர். 15 பேர் அரசு மருத்​து​வ​மனை​யில் தீவிர கண்​காணிப்​பிலும், 23 பேர் தனி​யார் மருத்​து​வ​மனை​யில் தீவிர சிகிச்​சைப் பிரி​விலும் உள்​ளனர். 24 பேர் தனி​யார் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்டு கண்​காணிப்​பில் உள்​ளனர்.

இந்த விபத்து குறித்து தொழில​கப் பாது​காப்பு மற்​றும் சுகா​தா​ரத் துறை இயக்​குநர், பொது சுகா​தா​ரத் துறை கூடு​தல் இயக்​குநர், தமிழ்​நாடு மாசுக் கட்​டுப்​பாட்டு வாரிய உறுப்​பினர் - செயலர் தலை​மை​யில் ஆய்வு மேற்​கொண்டு முதல்​கட்ட விசா​ரணை அறிக்​கையை 24 மணி நேரத்​துக்கு உள்​ளாக​வும், முழு விசா​ரணை அறிக்​கையை 3 நாட்​களுக்கு உள்​ளாக​வும் சமர்ப்​பிக்க உத்​தர​விட்​டுள்​ளேன்.

இந்த சம்​பவத்​தில் 2 பெண்​கள் உயி​ரிழந்​தனர் என்ற செய்​தி​யைக் கேட்டு மிக​வும் அதிர்ச்​சி​யும், வேதனை​யும் அடைந்​தேன். அவர்​களது குடும்​பத்​தினருக்கு எனது ஆழ்ந்த இரங்​கலை​யும், ஆறு​தலை​யும் தெரி​வித்​துக் கொள்​வதோடு, முதல்​வர் பொது நிவாரண நிதி​யில் இருந்து தலா ரூ.2 லட்​சம் வழங்​க​வும் உத்​தர​விட்​டுள்​ளேன். அவர்​களது உடலை சொந்த மாநிலத்​துக்கு அனுப்பி நல்​லடக்​கம் செய்ய அரசு செல​வில் நடவடிக்கை மேற்​கொள்​ள​வும் உத்​தர​விட்​டுள்​ளேன்.

மருத்​து​வ​மனை​யில் உள்​ளவர்​களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்​க​வும், உயி​ரிழந்த மற்​றும் பாதிப்​படைந்த தொழிலா​ளர்​களுக்​கு, தொழிலா​ளர் மாநில ஈட்​டுறுதி காப்​பீட்டு (இஎஸ்ஐ) திட்​டம், வேலை​யாள் இழப்​பீடு சட்​டத்​தின்​கீழ் உரிய இழப்​பீடு வழங்க நடவடிக்கை மேற்​கொள்​ள​வும் உத்​தர​விட்​டுள்​ளேன்.

வருங்​காலங்​களில் இது​போன்ற விபத்​துகளை தவிர்க்​கும் நோக்​கில், பேர​பாய தொழிற்​சாலைகளில் உடனடி​யாக ஆய்​வு​கள் மேற்​கொள்​ள​வும் உத்​தர​விட்​டுள்​ளேன்.

தகவல் தொழில்​நுட்​பத் துறை அமைச்​சர், எம்​எல்ஏ, மாவட்​டக் கண்​காணிப்பு அலு​வலர், மூத்த ஐஏஎஸ் அதி​காரி, மாவட்ட ஆட்​சி​யர் இணைந்து சம்பவ இடத்​தில் நேரடி​யாக ஆய்வு செய்து தக்க மேல்​ நட​வடிக்​கை​ எடுக்குமாறு அறி​வுறுத்​தி​யுள்​ளேன்​. இவ்​வாறு முதல்​வர்​ தெரி​வித்​துள்​ளார்​.

ஆய்வு அறிக்​கை​யின் அடிப்​படை​யில் உறு​தி​யாக நடவடிக்கை எடுக்​கப்​படும் என மாநில தொழிலா​ளர் நலத் துறை அமைச்​சர் ஜெ.​முகமது பர்​வேஸ் தெரி​வித்​துள்​ளார். இந்த சம்​பவத்​தில் 7 பேர் உயி​ரிழந்​த​தாக முதலில் தகவல் வெளி​யான நிலை​யில், 2 பேர் மட்​டுமே உயி​ரிழந்​த​தாக பின்​னர் அதி​காரப்​பூர்​வ​மாக தெரிவிக்​கப்​பட்​டது.

அமோனியா வாயு கசி​வால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதி: முதல்வர் அறிவிப்பு
​பெரியபாளையம் அருகே தனியார் தொழிற்சாலையில் பரிதாபம்: அமோனியா வாயு கசிந்து 2 பெண் தொழிலாளர்கள் பலி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in