​பெரியபாளையம் அருகே தனியார் தொழிற்சாலையில் பரிதாபம்: அமோனியா வாயு கசிந்து 2 பெண் தொழிலாளர்கள் பலி

கவலைக்கிடமான நிலையில் பலருக்கு தீவிர சிகிச்சை
திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் பகுதியில் அமோனியா வாயு கசிவால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு அமைச்சர் குமார் ஆறுதல் கூறினார்.

திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் பகுதியில் அமோனியா வாயு கசிவால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு அமைச்சர் குமார் ஆறுதல் கூறினார்.

Updated on
2 min read

திரு​வள்​ளூர்: திரு​வள்​ளூர் மாவட்​டம் கன்​னிகைப்​பேர் கிராமத்​தில் கடல் உணவு பதப்​படுத்​தும் தனி​யார் தொழிற்​சாலை​யில் அமோனியா வாயு கசிவு ஏற்​பட்டு 2 பெண் தொழிலா​ளர்​கள் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். இந்த விபத்​தில் வட மாநிலங்​களைச் சேர்ந்த தொழிலா​ளர்​கள் 63 பேர் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். அவர்​களுக்கு சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது. பலரது நிலைமை கவலைக்​கிட​மாக இருப்​ப​தால், உயிரிழப்பு எண்​ணிக்கை அதி​கரிக்​கக்​கூடும் என அஞ்​சப்​படு​கிறது.

திரு​வள்​ளூர் மாவட்​டம் ஊத்​துக்​கோட்டை வட்​டம் பெரிய​பாளை​யம் அடுத்த கன்​னிகைப்​பேர் பகு​தி​யில்இறால் உள்​ளிட்ட கடல் உணவுப் பொருட்​களை பதப்​படுத்தி வெளி​நாடு​களுக்கு ஏற்​றுமதி செய்​யும் ‘செ​யின்ட் பீட்​டர் அண்ட் பால் ஸீ ஃபுட்’ என்ற தனி​யார் நிறு​வனம் செயல்​பட்டு வரு​கிறது. சென்னை வண்​ணாரப்​பேட்​டையைச் சேர்ந்த ஜோசப் ஜெகன், மோகன் ஆகியோர் இதை நடத்தி வரு​கின்​றனர். இங்கு இரவு, பகல் என 2 ஷிப்ட்​களில் 200-க்​கும் மேற்​பட்ட வடமாநிலத் தொழிலா​ளர்​கள் தங்கி வேலை செய்து வரு​கின்​றனர்.

நேற்று காலை வழக்​கம்​போல சுமார் 120 தொழிலா​ளர்​கள் பணி​யில் ஈடு​பட்​டிருந்​தனர். அப்​போது, குளிர்​சாதனப் பிரி​வில் பயன்​படுத்​தப்​படும் அமோனியா வாயு கசிந்​துள்​ளது. சில நிமிடங்​களில் தொழிற்​சாலை முழு​வதும் வாயு பரவிய​தால் தொழிலா​ளர்​களுக்கு மூச்​சுத் திணறல், கண் எரிச்​சல் ஏற்​பட்​டுள்​ளது.

இதில் 60 பெண்​கள், 5 ஆண்​கள் எனமொத்​தம் 65 தொழிலா​ளர்​கள் மயக்கம் அடைந்​தனர். சிலருக்கு வாய், மூக்​கு, கண், காதுகளில் ரத்​தக் கசி​வும் ஏற்​பட்​ட​தால் பதற்​ற​மான சூழல் உரு​வானது. பெரிய​பாளை​யம் போலீ​ஸார், தீயணைப்​புத் துறை​யினர், வரு​வாய்த் துறை​யினர் விரைந்து வந்து மீட்​புப் பணி​களில் ஈடு​பட்​டனர். பாதிக்​கப்​பட்ட தொழிலா​ளர்​கள் உடனடி​யாக 108 ஆம்​புலன்ஸ் மற்​றும் பல்​வேறு வாக​னங்​கள் மூலம் அருகே உள்ள மருத்​து​வ​மனை களுக்கு கொண்டு செல்​லப்​பட்​டனர்.

இதில், மஞ்​சங்​காரணை வேல்ஸ் மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்ட 45 பேரில் ஒடிசா மாநிலத்​தைச் சேர்ந்த ஜுமானி ஜுவாங் (19) என்ற இளம்​பெண்​ணும், செங்​குன்​றம் அருகே உள்ள சிறுணி​யம் வெங்​கடேஸ்​வரா மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்ட 20 பேரில் ஒடி​சாவைச் சேர்ந்த மாலோதி (20) என்ற இளம்​பெண்​ணும் மருத்​து​வ​மனைக்கு கொண்டு செல்​லும் வழி​யிலேயே உயி​ரிழந்​தனர்.

பெரிதும் பாதிப்​புக்கு உள்​ளான 7 தொழிலா​ளர்​கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்​கும், 9 பேர் ராஜீவ் காந்தி அரசு பொது​மருத்​து​வ​மனைக்​கும் மேல் சிகிச்​சைக்​காக மாற்​றப்​பட்​டனர். அவர்​களுக்கு தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்டு வருகிறது. பலரது நிலைமை கவலைக்​கிட​மாகஇருப்​ப​தால் உயி​ரிழப்பு எண்​ணிக்கை அதி​கரிக்​கும் என அஞ்​சப்​படு​கிறது.

அமைச்​சர்​கள் ஆதவ் அர்​ஜு​னா, அருண்​ராஜ், ராஜ்மோகன், குமார் மற்​றும் எம்​எல்​ஏக்​கள் விஜயகு​மார், ரவி, அருண்​கு​மார் ஆகியோ​ரும் மருத்​து​வ​மனை​களுக்கு சென்று தொழிலா​ளர்​களை சந்​தித்து ஆறு​தல் தெரி​வித்​தனர். திரு​வள்​ளூர் மாவட்ட ஆட்​சி​யர் கவி​தா, காஞ்​சிபுரம் சரக டிஐஜி சஷாங் சாய், திரு​வள்​ளூர் மாவட்ட எஸ்​.பி. சாய் பிரனீத் ஆகியோர் தொழிற்​சாலை​யில் ஆய்வு நடத்​தினர்​.

இதற்​கிடையே, தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 30 பேர் குழு​வினர், கும்​மிடிப்​பூண்டி உள்​ளிட்ட பகு​தி​களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்​களு​டன் இணைந்து பாது​காப்பு உபகரணங்​களு​டன் சம்பவ இடத்​தில் மீட்பு பணி​யில் ஈடு​பட்​டனர். தமிழ்​நாடு மாசுக் கட்​டுப்​பாட்டு வாரிய அதி​காரி​களும் தொழிற்​சாலை​யில் ஆய்வு மேற்​கொண்​டு வரு​கின்​றனர்.

தொழிற்​சாலை​யைச் சுற்றி ஏராள​மான போலீ​ஸார் பாது​காப்பு பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளனர். அங்கு பணி​யாற்​றிய தொழிலா​ளர்​களில் 100-க்​கும் மேற்​பட்​டோர் மாவட்ட நிர்​வாகம் ஏற்​பாட்​டில் அரு​கில் உள்ள திருமண மண்​டபங்​களில் தங்க வைக்​கப்​பட்​டு, மருத்​து​வப் பரிசோதனை, உணவு உள்​ளிட்ட அடிப்​படை வசதி​கள் செய்து தரப்​பட்​டுள்​ளன.

3 பேர் கைது: அமோனியா வாயு கசிவு தொடர்​பாக பெரிய​பாளை​யம் போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​து, தொழிற்​சாலை உரிமை​யாளர்​கள் ஜோசப் ஜெகன், மோகன், மேலா​ளர் டேனியல்​ ஆகிய 3 பேரை கைது செய்​து வி​சா​ரணை மேற்​கொண்​டுள்​ளனர்​. தொழிற்​சாலை செயல்​பட தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது.

<div class="paragraphs"><p>திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் பகுதியில் அமோனியா வாயு கசிவால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு அமைச்சர் குமார் ஆறுதல் கூறினார். </p></div>
“யோகா நம் வாழ்வின் அங்கமாக வேண்டும்” - கொல்கத்தாவில் 30,000 பேருடன் பங்கேற்ற பிரதமர் மோடி வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in