Published : 01 Feb 2017 09:35 AM
Last Updated : 01 Feb 2017 09:35 AM
மெரினா போராட்டத்தில் தீவிரவாதி கள் ஊடுருவலை அரசு தடுக்காதது ஏன் என்று சட்டப்பேரவை காங் கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி கேள்வி எழுப்பினார்.
சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக் கும் தீர்மானத்தின் மீது பேசிய ராமசாமி, ‘மெரினா கடற்கரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. தற்போது எந்தப் பிரச் சினையும் இல்லாத நிலையில் எதற் காக இந்தத் தடை? போராட்டத்தில் தீவிரவாதிகள் நுழைந்துள்ளதாக கூறியுள்ளீர்கள். அவர்களை அரசு ஏன் தடுக்கவில்லை? தமிழகம் அமைதிப்பூங்கா வாக திகழ்கிறது என்கிறீர்கள். அப்படி இருக்கும்போது தீவிர வாதிகள் எப்படி நுழைந் திருக்க முடியும். இது தொடர்பாக சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்:
மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் நடத்திய போராட் டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதாக கூறப்பட்டது. இவர்கள் யார் என்பது தொடர் பான விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முடிவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT