Published : 04 Mar 2017 07:48 AM
Last Updated : 04 Mar 2017 07:48 AM

மின்வாரிய பொறியாளர் பணி: 13-ல் நேர்முகத் தேர்வு தொடக்கம்

மின்வாரியத்தில் உதவிப் பொறி யாளர் பணி நேரடி நியமனத் துக்கான நேர்முகத் தேர்வு வரும் 13-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள 300 உதவிப் பொறியாளர், மின்னியல் பணி நேரடி நியமனத்துக்கான நேர்முகத் தேர்வு வரும் 13-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதேபோல், 50 உதவிப் பொறி யாளர், கட்டிடவியல் மற்றும் 25 உதவிப் பொறியாளர் இயந்திரவி யல் பதவிக்கான நேரடி நியமனத் துக்கான நேர்முகத் தேர்வு வரும் 17, 18 தேதிகளில் சென்னை கோயம்பேடு மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள விஜய் பார்க் ஓட்டலில் (தொலைபேசி எண் : 044-71337788) நடைபெறும்.

நேர்முகத் தேர்வுக்கு தகுதி யானவர்கள் (கட்-ஆப் மார்க் பெற்றவர்கள்) www.tangedco.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக தங்களது நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் மற்றும் விவரப் பட்டியலை பதி விறக்கம் செய்து நேர்முகத் தேர் வில் கலந்துகொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x