Published : 18 Jun 2017 09:30 AM
Last Updated : 18 Jun 2017 09:30 AM

வண்டலூர் அருகே புரட்சி பாரதம் கட்சி நிர்வாகி கொலை: உறவினர்கள் சாலை மறியல்

வண்டலூர் அருகே புரட்சி பாரதம் கட்சி நிர்வாகி கொலை செய்யப்பட்டார். இதைக் கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வண்டலூரை அடுத்த மண்ணிவாக்கம் பெரியார் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (43). இவர் புரட்சி பாரதம் கட்சியின் காஞ்சி கிழக்கு மாவட்ட அமைப்பாளராக இருந்து வந்தார். நேற்று மதியம் வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருட்களை வாங்கிக்கொண்டு பைக்கில் வண்டலூர் - வாலாஜா பாத் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த கார் ஒன்று, திடீரென முருகனின் பைக் மீது மோதியது. இதில் முருகன் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

காரில் இருந்து இறங்கிய 7 பேர் கொண்ட கும்பல் முருகனை சரமாரியாக நடுரோட்டிலேயே வெட்டிவிட்டு தப்பிவிட்டது. படுகாயமடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த ஓட்டேரி போலீஸார், சம்பவ இடத்துக்கு சென்று முருகனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக் காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், முருகனை முன்விரோதம் காரணமாக யாராவது கொலை செய்தார் களா அல்லது வேறு காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

முருகன் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து அவரது உறவினர்களும் புரட்சி பாரதம் கட்சியினரும் ஓட்டேரி மற்றும் குரோம்பேட்டையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மண்ணிவாக்கம் பகுதியில் பதற்றம் நிலவுவதால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சமக நிர்வாகி கொலை

மதுராந்தகம் அடுத்த செய்யூர் பகுதியைச் சேர்ந்தவர் அருள்பதி (38). சமத்துவ மக்கள் கட்சியின் லத்தூர் ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். அருள்பதி, கூடுவாஞ்சேரியில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் ஏற்றுமதி ஆடை நிறுவனத்தில் சமையல் ஒப்பந்தக்காராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், கூடுவாஞ்சேரி யைச் சேர்ந்த உஷா என்ற பெண் ணுடன் அருள்பதிக்கு தொடர்பு இருந்துள்ளது. இதை உஷாவின் கணவர் சங்கர் கண்டித்துள்ளார். அதன்பிறகும் உறவு தொடர்ந்ததால் இதுபற்றி உஷாவின் சகோதரர்கள் சுந்தர் (30), வெங்கடேசன் (29) ஆகியோரிடம் சங்கர் கூறியுள்ளார். அவர்கள் அருள்பதியை கண்டித் துள்ளனர். அப்போது அவர்களுக் குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திர மடைந்த சுந்தரும் வெங்கடே சனும் அருள்பதியை உருட்டுக் கட்டையால் அடித்து கொலை செய்தனர்.

இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீஸார் வழக்கு பதிவு செய்து சுந்தர், வெங்கடேசன் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x