Published : 21 Feb 2017 09:44 AM
Last Updated : 21 Feb 2017 09:44 AM

அதிமுக எம்எல்ஏக்களின் செயல்பாடு வாக்காளர் எண்ணத்துக்கு மாறானது: திருப்பூர் எம்பி சத்தியபாமா குற்றச்சாட்டு

வாக்காளர்களின் எண்ணத் துக்கு மாறாக அதிமுக எம்எல் ஏக்கள் செயல்பட்டுள்ளதன் பலன் உள்ளாட்சித் தேர்தலில் தெரியவரும் என்று திருப் பூர் எம்பி சத்தியபாமா தெரிவித்தார்.

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் (அதிமுக) சத்தியபாமா, கோபியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள அதிமுக எம்எல்ஏ., எம்பிக்களுக்கு ஜெயலலிதாவால்தான் பதவிகள் கிடைத்தன. மக்கள் ஜெயலலிதாவுக்காகத்தான் வாக்களித்தனர். ஆனால், வாக் களித்த மக்களின் கருத்துக்கு எதிராக எம்எல்ஏக்கள் செயல் பட்டு உள்ளனர். இதன் பலன் வருகிற உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் நன்றி தெரிவிக் கிறார்கள்.

தொகுதிக்கு வந்து தங்க ளுக்கு வாக்களித்தவர்களின் கருத்துகளை கேட்டுவிட்டு, சட்டப்பேரவைக்கு சென்றி ருந்தால், அனைத்து எம்எல்ஏக் களும் நல்ல முடிவை எடுத்து இருப்பார்கள்.

நான் எனக்கு வாக்களித்த மக்களின் விருப்பத்தின்படி நடந்துகொண்டேன். இதனால் எனக்கு ஏராளமானவர்கள் நன்றியை தெரிவித்து வருகி றார்கள். சிலர் பாராட்டு விழா நடத்தப்போவதாகவும் தெரி வித்துள்ளனர். அரசியலில் பதவி என்பது இன்று இருக்கும்; நாளை இருக்காது.

அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென பிரதமர் மோடியை, ஜெயலலிதா நேரிடையாக சந்தித்து வலியுறுத் தினார்.

இத்திட்டத்தை நிறை வேற்ற நாடாளுமன்றத்தில் நானும் குரல் கொடுத்து வருகிறேன். இந்த திட்டத்தை செயல்படுத்தி முடிப்பதற்காக தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்துவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x