Published : 10 Jun 2017 09:26 AM
Last Updated : 10 Jun 2017 09:26 AM
பொறியியல் படிப்புக்கு இந்த ஆண்டு ஒரு லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.
பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் பதிவு மே 1-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி முடிவடைந் தது. பிரின்ட் அவுட் எடுக்கப் பட்ட ஆன்லைன் விண்ணப் பத்தை தேவையான ஆவணங் களுடன் சமர்ப்பிக்க ஜூன் 3 கடைசி தேதியாக நிர்ணயிக்கப் பட்டிருந்தது. ஆன்லைனில் பதிவு செய்த மாணவர்கள் நேரடியாக வும், தபால் மூலமாகவும் அண் ணா பல்கலைக்கழகத்தில் விண் ணப்பங்களைச் சமர்ப்பித்தனர். இந்த ஆண்டு பொறியியல் படிப் புக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருப்பதாகவும், இந்த எண்ணிக்கை கடந்த ஆண் டைக் காட்டிலும் 10 ஆயிரம் அதிகம் என்றும் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT