Published : 27 Apr 2017 09:25 AM
Last Updated : 27 Apr 2017 09:25 AM
பெரம்பலூர் அருகே பயிர்கள் கருகியதால் ஏற்பட்ட அதிர்ச்சியில் விவசாயி உயிரிழந்தார்.
பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி நல்லேந்திரன்(50). இவர், தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் மற்றும் குத்தகைக்கு எடுத்திருந்த 2 ஏக்கர் நிலத்தில் வெங்காயம், எலுமிச்சை, பருத்தி பயிரிட்டிருந்தார். கடும் வறட்சியால் அனைத்து பயிர்களும் கருகின.
இதனால் கடும் வேதனை யடைந்த நல்லேந்திரன் கடந்த சில நாட்களாக மிகவும் சோகமாக காணப்பட்டார். இந்நிலையில், நேற்று வீட்டில் இருந்த நல்லேந்தி ரனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற் பட்டு, மயங்கி விழுந்து உயிரிழந் தார்.
விவசாயிகளின் கோரிக்கை களை வலியுறுத்தி, பெரம்பலூரில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நேற்று முன்தினம் நடை பெற்ற போராட்டத்தில் நல்லேந்திரன் கலந்துகொண்டு கைதானவர் என்பது குறிப்பிடத் தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT