Published : 22 Jan 2017 10:32 AM
Last Updated : 22 Jan 2017 10:32 AM
இந்திய வங்கி ஊழியர் சம்மேள னத்தின் தமிழ்நாடு பிரிவின் பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஜல்லிக்கட்டு நடத்த அனு மதிக்க வேண்டும் என்ற போராட்டம் நமது கலச்சாரத்தை உயர்த்திப் பிடிப்பது மட்டுமல்ல. பன்னாட்டு கம்பெனிகளின் சதிக்கு எதிராக, கார்ப்பரேட்டுகளின் சுரண்டலுக்கு எதிராக, விவசாயம் புறக்கணிக்கப்படுவதற்கு எதிராக, காவிரி நதி நீர் மேம்பாட்டு ஆணையத்தை அமைப்பதில் மத்திய அரசின் பாரபட்ச போக் குக்கு எதிராக இப்படி பல வடிவங் களில் மக்களின் உரிமைக் காக நடத்தப்படும் போராட்டமாக தொடர்ந்து வருகிறது.
மிகவும் அமைதியான முறையில் இளைஞர்கள் நடத்தும் இப்போராட்டத்துக்கு இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் தனது முழு ஆதரவை தெரி வித்துக் கொள்கிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள் ளது.
இதேபோல், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கமும் இப்போராட்டத்துக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளது. சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் தலைமை யில் வங்கி ஊழியர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT