Published : 03 Jun 2016 07:55 AM
Last Updated : 03 Jun 2016 07:55 AM
பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்ட யுவராஜ், நீதிமன்ற உத்தரவுப்படி திருநெல் வேலி டவுன் காவல் நிலையத் தில் நேற்று ஆஜராகி கையெழுத் திட்டார்.
சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் போலீஸாரால் தேடப்பட்ட, தீரன் சின்னமலை கவுண்டர் பேரவைத் தலைவர் யுவராஜ் கடந்த சில மாதங் களுக்கு முன் நாமக்கல் சிபிசிஐடி போலீஸில் சரணடைந்தார். பின் னர் அவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு அவரது சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய் யப்பட்ட மனு மீதான விசாரணை கடந்த 30-ம் தேதி நடைபெற்றது. யுவராஜுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், திருநெல் வேலி டவுன் காவல் நிலையத் தில் தினமும் காலையும், மாலை யும் ஆஜராகி யுவராஜ் கையெழுத் திட வேண்டும் என்று உத்தர விட்டிருந்தது.
ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்த யுவராஜ் நேற்று திருநெல்வேலி டவுன் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத் திட்டார். அப்போது செய்தியாளர் களிடம் பேசிய அவர், ‘கோகுல்ராஜ் தற்கொலை செய்துகொண்டார். இதை நீதிமன்றம் மூலம் நிரூபிப்பேன்’ என்று தெரிவித் தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT