Published : 31 Jan 2014 12:00 AM
Last Updated : 31 Jan 2014 12:00 AM

பேரவையில் கருணாநிதிக்கு இருக்கை

சட்டப்பேரவையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது என பேரவைத் தலைவர் ப.தனபால் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ரோசய்யா வியாழக்கிழமை உரை நிகழ்த்தினார். இதையடுத்து, சட்டப்பேரவை கூட்டத்தை எத்தனை நாள் நடத்துவது என்று முடிவு செய்ய பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. அதன்பின், அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, பேரவையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு தனியாக இருக்கை வசதி செய்து தரவில்லை என கூறப்படுகிறதே என்ற கேள்வி க்கு பதில் அளித்த தனபால், “அவருக்கு தனியாக இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆட்சி பொறுப்பேற்று இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்த பிரச்சினையை இப்போது ஏன் கிளப்புகிறீர்கள்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x