Published : 02 Sep 2016 08:48 AM
Last Updated : 02 Sep 2016 08:48 AM

42 நாட்கள் தேடியும் பலனில்லை: மாயமான விமானத்தை தேடும் பணி 7-ம் தேதியுடன் முடிகிறது

ராணுவ அதிகாரிகள் ஆலோசனை



42 நாட்கள் தேடியும் சாதகமான தகவல்கள் கிடைக்காத நிலை யில், மாயமான ராணுவ விமா னத்தை தேடும் பணி வருகிற 7-ம் தேதியுடன் நிறைவடையலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை தாம்பரம் விமானப் படைத் தளத்தில் இருந்து அந்தமானுக்கு கடந்த மாதம் 22-ம் தேதி ஏ.என்-32 ரக ராணுவ சரக்கு விமானம் 29 பேருடன் புறப்பட்டு சென்றது. நடுவானில் பறந்தபோது அந்த விமானம் திடீரென மாயமானது. இந்த விமானத்தை தேடும் பணியில் போர்க் கப்பல்கள், விமானங் கள், ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத் தப்பட்டன. ஆனால் எதிலுமே நம்பகமான தகவல்கள் கிடைக்க வில்லை. அதைத் தொடர்ந்து கடலின் மேற்பரப்பில் விமானத்தை தேடும் பணி கடந்த மாதம் 2-ம் தேதியுடன் நிறுத்தப்பட்டது.

தேசிய கடல்சார் ஆராய்ச்சி மையத்துக்குச் சொந்தமான ‘சாகர்நிதி’, மத்திய புவியியல் ஆராய்ச்சித் துறைக்குச் சொந்தமான ‘சமுத்ர ரத்னாகர்’ ஆகிய இரு ஆராய்ச்சிக் கப்பல் கள், ‘நிருபக்’ என்ற கடற்படை கப்பல், ஒரு நீர்மூழ்கி கப்பல் என 4 கப்பல்கள் மாயமான விமானத்தை ஆழ்கடலில் தேடும் பணியில் தற்போது ஈடுபட்டுள் ளன. கப்பல்கள் நடத்திய தேடு தலில், கடலுக்கு அடியில் சந்தே கப்படும் விதத்தில் 54 பொருட் களை கண்டுபிடிக்கப்பட்டன. இதில் 29 பொருட்கள் விமானத்தின் பாகங்கள் இல்லை என்பது ஆராய்ச்சி மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மீதமுள்ள 25 பொருட்கள் மாயமான விமானத்தின் பாகங் களா என்பதை உறுதி செய்ய, அந்த இடங்களில் மறு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. மத்திய புவியியல் ஆராய்ச்சித் துறைக் குச் சொந்தமான ‘சமுத்ர ரத்னா கர்’ கப்பல் இந்த பணியில் ஈடு பட்டுள்ளது. கடந்த 24-ம் தேதி யில் இருந்து இந்த மறு ஆய்வு பணி நடந்து வருகிறது. இதில் இதுவரை மாயமான விமானம் குறித்து சாதகமான தகவல்கள் கிடைக்கவில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் மறு ஆய்வு பணி முடியவுள்ளது. அதைத் தொடர்ந்து வேறு சில தேடுதல் பணிகள் நடைபெறவுள்ளன.

மாயமான ராணுவ விமானத்தை 42 நாட்கள் தேடியும் இதுவரை சாதகமான தகவல்கள் கிடைக்கவில்லை. இதனால் வருகிற 7-ம் தேதியுடன் விமானத்தை தேடும் பணியை முடிக்க அதிகாரிகள் திட்டமிட் டுள்ளனர். விமானத்தை கண்டு பிடிக்க அடுத்து எந்த மாதிரி யான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து நேற்று சென்னை யில் ராணுவ அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தி னர். இதில் கப்பல் படை அதிகாரி கள், ஆராய்ச்சி கப்பல்களின் அதிகாரிகள், விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x