Published : 21 Oct 2014 10:15 AM
Last Updated : 21 Oct 2014 10:15 AM

தீபாவளிக்கான 10 சிறப்பு ரயில்களில் இன்னமும் இடமிருக்கிறது: தெற்கு ரயில்வே அறிவிப்பு

தீபாவளிக்கான 10 சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில்களில் இன்னமும் இடமிருக்கிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:

இன்று (அக்.21) புறப்படும் திருநெல்வேலி சென்னை எழும்பூர் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் (எண்: 06012), கோவை சென்னை சென்ட்ரல் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் (எண்: 06608), அக்டோபர் 22-ம் தேதி புறப்படும் நாகர்கோவில் யஷ்வந்த்பூர் சிறப்பு ரயில் (எண்: 06597),

23-ம் தேதி புறப்படும் கோவை சென்னை சென்ட்ரல் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் (எண்: 06610), 24-ம் தேதி புறப்படும் சென்னை எழும்பூர் நாகர்கோவில் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் (எண்: 06351), சென்னை சென்ட்ரல் கோவை சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் (எண்: 06607), 27-ம் தேதி புறப்படும் சென்னை எழும்பூர் திருநெல்வேலி சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் (எண்: 06745), சென்னை சென்ட்ரல் கோவை சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் (எண்: 06605),

அக்டோபர் 30-ம் தேதி புறப்படும் திருநெல்வேலி சென்னை எழும்பூர் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் (எண்: 06714), நவம்பர் 3-ம் தேதி புறப்படும் சென்னை எழும்பூர் திருநெல்வேலி சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் (எண்: 06715) ஆகிய சிறப்பு ரயில்களில் இன்னமும் இடமிருக்கிறது. இந்த ரயில்களில் உறுதிப்படுத்தப்பட்ட முன்பதிவு டிக்கெட் எடுத்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

தீபாவளி அன்று (அக்.22) சென்னை கோட்டத்தில் உள்ள கணினி முன்பதிவு மையங்கள் காலை 8 மணி முதல் பகல் 2 மணி வரை மட்டும் செயல்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x