Published : 19 Jan 2015 12:49 PM
Last Updated : 19 Jan 2015 12:49 PM

ஜெயலலிதாவுடனான சந்திப்பு பின்னணி என்ன?- ஜேட்லி விளக்கமளிக்க ராமதாஸ் வலியுறுத்தல்

ஜெ.வை சந்தித்தது தொடர்பாக அருண் ஜேட்லி விளக்கம் அளிக்க வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து ராமதாஸ் கூறியதாவது: ''ஜெயலலிதா மேல் முறையீட்டு மனு விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அவரை மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி சந்தித்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ஜேட்லி விளக்கம் தரவேண்டும் '' என ராமதாஸ் தெரிவித்தார்.

நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஜெ.வை ஜேட்லி சந்திப்பது முறையா? என்று தி.மு.க தலைவர் கருணாநிதியும் கேள்வி எழுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று ஜாமீனில் வெளிவந்த ஜெயலலிதா , இதுவரை எந்த முக்கியப் பிரமுகரையும் சந்திக்கவில்லை. அரசியல் உள்ளிட்ட எந்த பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை.

இந்நிலையில்,பா.ஜ.க மூத்த தலைவரும், நிதி அமைச்சருமான அருண் ஜேட்லி முதல் முறையாக ஜெயலலிதாவை சந்தித்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x