Published : 25 Jan 2017 02:21 PM
Last Updated : 25 Jan 2017 02:21 PM

மாணவர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்துக: பழ.நெடுமாறன்

மாணவர்கள் மற்றும் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று (புதன்கிழமை) அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக மாணவர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒன்றுபட்டு நின்று ஜல்லிக்கட்டு விளையாட்டுக்காக நடத்திய அறவழிப் போராட்டம் உலகமே வியந்து பாராட்டும் வகையில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. மாணவர்களின் கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் ஏற்றுச் சட்டமாக்கி உள்ளன.

இந்த சூழ்நிலையில் பல ஊர்களில் மாணவர்கள் கைது செய்யப்படுவதாக செய்திகள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் அமைதி திரும்பிக்கொண்டிருக்கும் வேளையில் இச்செயல் அதைக் கெடுப்பதாகும்.

மாணவர்களுக்கும் மற்றும் மக்களுக்கும் எதிரான அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்தவும், கைது செய்யப்பட்ட மாணவர்களையும் மற்றவர்களையும் விடுவிக்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வருமாறு முதல்வரை வேண்டிக்கொள்கிறேன்'' என்று பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x