Published : 19 Apr 2017 11:01 AM
Last Updated : 19 Apr 2017 11:01 AM
தினகரன் வெளிநாட்டுக்கு தப்பிவிடாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் டெல்லி போலீஸ் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இரட்டை இலை சின்னம் பெற இடைத்தரகருக்கு லஞ்சம் கொடுத்ததாக டிடிவி.தினகரன் மீது டெல்லி போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்நிலையில், தினகரன் வெளிநாட்டுக்கு தப்பிவிடாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் டெல்லி போலீஸ் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தினகரன், வெளிநாட்டு குடியுரிமை பெற்றுள்ளவர் என்பதால் விமான நிலையங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக டெல்லி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி க்ரைம் பிராஞ்சு இணை ஆணையர் பிரவீர் ரஞ்சன், எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதை உறுதி செய்தார். தூதரக அதிகாரிகளுக்கும் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
முன்னதாக டெல்லியில் சுகேஷ் சந்திரசேகர் என்ற இடைத்தரகர் கைது செய்யப்பட்டார். இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவரை அணுகியதாகவும். இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தந்தால் ரூ.60 கோடி லஞ்சம் தர தினகரன் தயாராக இருந்ததாகவும் சுகேஷ் டெல்லி போலீஸில் தெரிவித்திருந்தார். இதனடிப்படையிலேயே தினகரனுக்கு வழக்கு பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT