Published : 05 Jan 2016 09:13 AM
Last Updated : 05 Jan 2016 09:13 AM
இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 49 பேர் காவலை மன்னார், பருத்தித்துறை, ஊர்காவல் துறை நீதிமன்றங்கள் ஜனவரி 18-ம் தேதி வரை நீட்டித்துள்ளது.
ராமேசுவரம், மண்டபம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 49 பேரை கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் இலங்கை கடற்படையினர் தனித்தனியாக சிறைபிடித்தனர். விசாரணைக்குப் பின்னர் மன்னார், பருத்தித்துறை, ஊர்காவல்துறை நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தி வவுனியா, யாழ்ப்பாணம் சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
மீனவர்களின் காவல் நேற்றுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து 49 தமிழக மீனவர் களும் மன்னார், பருத்தித்துறை, ஊர்காவல்துறை நீதிமன்றங் களில் தனித்தனியாக ஆஜர்படுத் தப்பட்டனர். இவர்களை ஜனவரி 18-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து மீனவர்கள் வவுனியா, யாழ்ப்பாணம் சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT