Published : 14 Jan 2016 09:53 AM
Last Updated : 14 Jan 2016 09:53 AM

ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அவசர சட்டம் கொண்டுவர மத்திய அரசால் முடியாது: அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வர முடியாது; மாநில அரசு அவசர சட்டம் கொண்டு வந்தால் அதற்கு துணை நிற்போம் என வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

இந்திய தொழில் கூட்டமைப்பு, வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் ஆகியவை சார்பில் மாமல்லபுரத்தில் இந்திய அயல்நாட்டு வர்த்தக கருத்தரங் கம் நேற்று நடந்தது.

இரண்டாம் நாள் கருத்தரங்க முடிவில், பத்திரிக்கையாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன் கூறும்போது, ‘ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவது தொடர்பான வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருப்பதால், ஜல்லிக்கட்டு நடத்து வதற்கான அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பிக்க முடி யாது. அதேநேரத்தில், சட்ட விதிகளின்படி தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வரலாம். மத்திய அரசு தமிழக அரசுக்கு துணை நிற்கும்’ என்று தெரிவித் தார்.

முன்னதாக இக்கருத்தரங்கில் இந்தியாவில் உற்பத்தி செய் யப்படும் பொருட்களை, அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற் கான வாய்ப்புகள், அயல் நாடுகளு டனான வர்த்தகம் மற்றும் துறை முகங்களை மேம்படுத்துதல் போன்றவைகள் குறித்து பேசப்பட் டன. மேலும் கடந்த ஆண்டில் இந்திய பொருளாதாரம் 38 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

கம்போடியா வர்த்தக அமைச்சர் சன் சந்தோல், லாவோஸ் வர்த்தக துணை அமைச் சர் சோம் சிந்தலந்தமித், மியான்மர் வர்த்தக இணை அமைச்சர் வின்ட் சான், வியட்நாம் தொழில் இணை அமைச்சர் குயேன் காம் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x