Published : 01 Jun 2017 08:28 AM
Last Updated : 01 Jun 2017 08:28 AM

மாமல்லபுரம் அருகே காரில் எரிந்து பலியான மூவரும் தற்கொலை?

மணமை அருகே விஎஸ்பி நகர், சாலையோரத்தில் காரில் எரிந்து பலியான மூவரும், குடும்பச் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனினும், அவர்கள் இறப்பில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளதால் போலீஸார் மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தை அடுத்த மணமை அருகேயுள்ள விஎஸ்பி நகர் பகுதியில் சாலை யோரத்தில் கடந்த 27-ம் தேதி இரவு, குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜெய தேவன்(55), இவரது மனைவி ரமாதேவி(48) மற்றும் மகள் திவ்ய(26) ஆகியோர், மர்மமான முறையில் தீப் பிடித்த காரில் உடல் கருகி பலியானார்கள். இச்சம்பவம் தொடர்பாக மாமல்லபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற் கொண்டு வந்தனர்.

இந்நிலையில், குடும்பப் பிரச்சினை காரணமாக மூவரும் காரில் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது. எனினும், இச்சம்பவத்தில் போலீஸாருக்கு பல்வேறு சந்தேகங்கள் உள்ளதால் திவ்யயின் கணவர் சரத்திடம், மாவட்ட எஸ்பி.சந்தோஷ் அதிமானி விசாரணை மேற்கொண்டதாக தெரிகிறது.

இந்நிலையில், குடும்பப் பிரச்சினை காரணமாக மூவரும் காரில் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது. எனினும், இச்சம்பவத்தில் போலீஸாருக்கு பல்வேறு சந்தேகங்கள் உள்ளதால் திவ்யயின் கணவர் சரத்திடம், மாவட்ட எஸ்பி.சந்தோஷ் அதிமானி விசாரணை மேற்கொண்டதாக தெரிகிறது.

மேலும், தீயில் எரிந்து பலியானவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x