Published : 31 Jan 2014 05:52 PM
Last Updated : 31 Jan 2014 05:52 PM

மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேரும் போட்டியின்றி தேர்வு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

மாநிலங்களவைத் தேர்தலில் வேட்புமனுவைத் திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு இன்று பிற்பகல் 3 மணியுடன் முடிவடைந்தது.

இதைத் தொடர்ந்து, வேட்பாளர்கள் 6 பேரும் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக, தமிழகத் தேர்தல் அதிகாரியும், தமிழக சட்டப்பேரவை செயலாளருமான ஜமாலுதீன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

மாநிலங்களவை உறுப்பினரக்ளாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுகவின் விஜிலா சத்யானந்த், சசிகலா புஷ்பா, முத்துகருப்பன் மற்றும் செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டி.கே. ரங்கராஜன் மற்றும் திமுகவின் திருச்சி சிவா ஆகிய 6 பேரின் பதவிக் காலம் ஏப்ரல் 3 ஆம் தேதியில் இருந்து தொடங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x