Published : 13 Mar 2017 10:04 AM
Last Updated : 13 Mar 2017 10:04 AM
பிளஸ் 2 மாணவர்களுக்கு முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. எனவே, தேர்வு மையங்களில் கண்கா ணிப்பை தீவிரப்படுத்தும் வகை யில் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் தலைமையில் சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த 2-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை தமிழ் உள்ளிட்ட மொழித்தாள், ஆங்கிலம், வணிக வியல், மனையியல், புவியியல் பாடங்களுக்கான தேர்வுகள் முடி வடைந்துவிட்டன. மருத்துவம், பொறியியல், விவசாயம் உள் ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் சேருவதற்கான முக்கிய பாடத் தேர்வுகள் இன்று முதல் தொடங்க உள்ளன. இந்தப் பாடங்களில் பெறும் மதிப்பெண்தான் தொழிற் கல்வி மாணவர் சேர்க்கைக்கு கணக்கிடப்படும்.
வேதியியல், கணக்குப்பதிவி யல் பாடத் தேர்வுகள் இன்று நடக் கின்றன. இதைத்தொடர்ந்து, 21-ம் தேதி இயற்பியல், பொருளாதாரம், 27-ம் தேதி கணிதம், விலங்கியல், 31-ம் தேதி உயிரியல், தாவர வியல், வரலாறு, வணிக கணிதம் ஆகிய தேர்வுகள் அடுத்தடுத்து நடைபெற உள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரி யல், விலங்கியல், தாவரவியல் ஆகிய முக்கிய பாடங்களுக் கான தேர்வுகள் நடைபெறும் போது அண்ணா பல்கலைக் கழக பேராசிரியர்கள் தலைமை யில் சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்படும்.
வேதியியல், கணிதம், இயற்பி யல் உள்ளிட்ட முக்கிய பாடங் களுக்கான தேர்வு நடைபெறும் நாட்களில் வழக்கமான பறக்கும் படையினருடன் அண்ணா பல் கலைக்கழக பேராசிரியர்கள் தலை மையிலான பறக்கும் படையின ரும் தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்வார்கள் என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT