Published : 14 Jun 2017 09:26 PM
Last Updated : 14 Jun 2017 09:26 PM
திமுக உறுப்பினர்கள் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்துக்கு வெளியே ராஜாஜி சாலையில் மறியலில் ஈடுபட்டதை நடிகை கஸ்தூரி விமர்சித்துள்ளார்.
பண பேர விவகாரம் வீடியோ தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவர சபாநாயகர் அனுமதி மறுத்ததைக் கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ராஜாஜி சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்ட திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை சிறிது நேரத்தில் போலீஸார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து நடிகை கஸ்தூரி ட்விட்டரில், ''ரோட்டுல மறியல். 'யார் அப்பன் வீட்டு காசு'ன்னு கோஷம். எல்லாம் பழக்கதோஷம்'' என்று விமர்சித்துள்ளார்.
கஸ்தூரியின் ட்வீட்:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT