Published : 30 Jun 2016 09:04 AM
Last Updated : 30 Jun 2016 09:04 AM
சென்னையில் உள்ள இந்திய ராணுவ மண்டல தலைமை அலுவலகம் சார்பில், ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் கடந்த சில மாதங் களாக நடத்தப்பட்டது. தமிழகம், புதுச்சேரி, அந்தமான் நிகோபர் தீவுகள் என பல இடங்களில் நடந்தது. இம்முகாம்களில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மருத்துவ சோதனை, எழுத்து தேர்வு உள்ளிட் டவை நடத்தி முடிக்கப்பட்டன.
இவற்றில் இறுதியாக தேர்வு செய்யப்பட்டவர்கள் தற்போது பயிற் சிக்காக பயிற்சி மையங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். அந்த மான் நிகோபர் தீவுகளில் இருந்து ராணுவத்துக்கு தேர்வு செய்யப் பட்டவர்களுக்கு சான்றிதழ் அளித்து பயிற்சிக்கு அனுப்பும் நிகழ்ச்சி, புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள ராணுவ அலுவலகத்தில் நேற்று நடந்தது.
ராணுவத் தேர்வுப் பிரிவு உயர் அதிகாரி பிரிகேடியர் சங்ராம் டால்வி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். மேலும், தேர்வு செய்யப்பட்டவர்களின் குடும் பத்தினருடன் கலந்துரையாடினார்.
இவர்கள் தவிர, வேலூர், தி.மலை, விழுப்புரம், கடலூர், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 766 பேர் ராணுவத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT